ஆன்மிகம்
தர்கா

பாசிபட்டினம் மகான் சர்தார் நெய்னா முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா

Published On 2021-08-26 04:34 GMT   |   Update On 2021-08-26 04:34 GMT
கந்தூரி விழாவையொட்டி தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் மற்றும் மகானின் வாரிசு தாரர்களால் சந்தனகுடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தர்காவில் உள்ள மக்பாராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தில் மகான் சர்தார் நெய்னா முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. மிக பிரசித்தி பெற்ற இந்த தர்காவில் 310-ம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஹத்தம் தமாம், மகான் நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தூரி விழாவை யொட்டி நேற்று அதிகாலை தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் மற்றும் மகானின் வாரிசு தாரர்களால் சந்தனகுடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தர்காவில் உள்ள மக்பாராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதில் மகான் வாரிசுதாரர்கள் உலக நன்மைக் காகவும் கொரோனாவில் இருந்து உலக மக்கள் விடுபடவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

வருகிற செப்டம்பர் மாதம் 2-ந் தேதி கந்தூரி நிறைவு விழாவும், 9-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழாவில் கொரோனா பரவல் காரணமாக சந்தனக்கூடு போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் திருவிழாக்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.

யாத்திரீகர்கள் தர்காவிற்குள் வர அனுமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் மற்றும் மகானின் வாரிசுதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன் மேற்பார் வையில் கொரோனா தடுப்பு மற்றும் பொதுசுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
Tags:    

Similar News