செய்திகள்
கொரோனா.

கொரோனாவில் இறந்த கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் விவரங்களை தெரிவிக்கலாம்

Published On 2021-07-25 07:05 GMT   |   Update On 2021-07-25 07:05 GMT
கொரோனா தொற்று பாதிப்பால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் விவரத்தை தெரிவிக்கலாம்.
திருப்பூர்:

கொரோனாவில் இறந்த கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் விவரங்களை தெரிவிக்கலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இறந்தால் உதவி வழங்கப்படுகிறது. தொழிலாளர் பெற்றோரின் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

எனவே கொரோனா தொற்று பாதிப்பால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் விவரத்தை தெரிவிக்கலாம். விவரத்தை திருப்பூர் பி.என்., ரோடு காமராஜர் முதல் வீதியில் இயங்கும்  தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News