செய்திகள்
பெரியகுளத்தில் மகனுடன் ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம்
பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார். #Loksabhaelections2019 #OPS
பெரியகுளம்:
துணைமுதல்வரும், அவரது மகனும் வரிசையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார். #Loksabhaelections2019 #OPS
தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நாளான இன்று செவன்த்டே மெட்ரிக்பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி தனது மகன் ரவீந்திரநாத்குமார், ஆகியோருடன் வாக்குப்பதிவை செலுத்தினார்.
முன்னதாக இந்த மையத்தில் எந்திரம் பழுது காரணமாக 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது. அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த மையத்தில் காலை முதலே கைக்குழந்தையுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேபோல் தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார். #Loksabhaelections2019 #OPS