தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

ரூ. 49 விலையில் 2ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

Published On 2020-09-12 05:01 GMT   |   Update On 2020-09-12 05:01 GMT
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 49 விலையில் 2 ஜிபி டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகை முதற்கட்டமாக 90 நாட்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

90 நாட்களுக்கு கிடைக்கும் புதிய சலுகை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ரூ. 49 சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. 



இதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடம் ஒன்றுக்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாய்ஸ் கால் மட்டுமின்றி இந்த சலுகையில் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 29 ஆம் தேதி வரை கிடைக்கும் என பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.

முன்னதாக இதே வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 1499 விலையில் வருடாந்திர சலுகையை அறிமுகம் செய்தது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இத்துடன் 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News