செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
முககவசம் இன்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு, முககவசம் வழங்கி, எச்சரிக்கை விடுத்தனர். மேலும் முழு ஊரடங்குக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொரோனா தடுப்பு விதிகள் கடைகளில் முழுமையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும், முககவசம் இன்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு, முககவசம் வழங்கி, எச்சரிக்கை விடுத்தனர். மேலும் முழு ஊரடங்குக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.