ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர்

புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-09-20 04:41 GMT   |   Update On 2021-09-20 04:41 GMT
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும்.

அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமிதரிசனம் செய்து விட்டு செல்வதை பார்க்க முடிந்தது.
Tags:    

Similar News