செய்திகள்
கொள்ளை

கொல்லங்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

Published On 2019-11-02 11:30 GMT   |   Update On 2019-11-02 11:30 GMT
கொல்லங்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60).

இவர் கடந்த 29-ந்தேதி குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அலிசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர். அதில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வெண்கல குத்துவிளக்கு 3, பித்தளை தட்டு 3, விளக்கு 5 மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், வீட்டில் பொருட்கள் திருடப்பட்ட இடம் ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரே கைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News