செய்திகள்
கொரோனா வைரஸ்

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி- புதிதாக 77 பேருக்கு பாதிப்பு

Published On 2021-06-16 13:50 GMT   |   Update On 2021-06-16 13:50 GMT
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தொற்று கடந்த 2 நாட்களாக இரண்டு இலக்கமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 961 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் நேற்று ஒரே நாளில் 143 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 வயதான முதியவர் கொரோனாவுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 67 வயதான முதியவர், 47 வயதான ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
Tags:    

Similar News