செய்திகள்
கைது

மேற்கு வங்காளத்தில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது

Published On 2021-07-16 02:54 GMT   |   Update On 2021-07-16 02:54 GMT
மேற்கு வங்காளத்தில் வெடிபொருட்களுடன் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினார்களா என்று விசாரித்து வருகின்றனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் பர்னகாஸ் மாவட்டத்தில் உள்ள ஷாசன் பகுதியில் போலீஸ் சிறப்பு படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் அங்கு வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தபோது, 10 கிலோ எடையுள்ள பயங்கர வெடிபொருட்களும், 20 தோட்டாக்களும், 40 ஆயிரம் ரொக்கப்பணமும் சிக்கின.

3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டினார்களா என்று விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் 3 பயங்கரவாதிகள் சிக்கினர். அந்த பயங்கரவாதிகளுக்கும், நேற்று பிடிபட்டுள்ள 3 பேருக்கும் தொடர்பு எதுவும் உள்ளதா? என்றும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News