செய்திகள்
வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்கப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.