செய்திகள்
கைது

மெலட்டூர் அருகே கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2021-06-05 10:28 GMT   |   Update On 2021-06-05 10:28 GMT
பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே கள்ள சாராயம் விற்றது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர்.
மெலட்டூர்: 

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை  செய்வதாக மெலட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரபு (35), பாலசுப்ரமணியன் மகன் விஜய்(21), உதயகுமார் மகன் சேதுராஜன்(21) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர். 
Tags:    

Similar News