செய்திகள்
கைது

மாமல்லபுரம் அருகே சூப்பர்வைசர் கொலை வழக்கில் நண்பர் சிக்கினார்

Published On 2019-11-09 09:14 GMT   |   Update On 2019-11-09 09:14 GMT
மாமல்லபுரம் அருகே சூப்பர்வைசர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (53). தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இவர் மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஏரி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வந்தனர்.

அவருடன் இரவில் மது குடிக்க சென்ற அவரது நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News