செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது
போடி அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி புதுக்காலனி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார். முதியவரின் செக்ஸ் தொல்லை அதிகரிக்கவே மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக்கொண்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் போடி புதுக்காலனி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார். முதியவரின் செக்ஸ் தொல்லை அதிகரிக்கவே மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக்கொண்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.