ஆன்மிகம்
கிரிவலம்

பவுர்ணமிக்கு மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டுமா?

Published On 2019-12-23 08:03 GMT   |   Update On 2019-12-23 08:03 GMT
பவுர்ணமி அன்று கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. கிரிவல வழிபாட்டைப் பவுர்ணமி அன்று மட்டும்தான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
சந்திரனின் அதிர்வுகள், காந்த சக்தி நம் மேல் விழுந்தால் நம் இயல்பான சக்தி வளமடையும். இதனால்தான் பவுர்ணமி அன்று கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. நிலவின் கதிர்கள் மலைமீதுள்ள மூலிகைகள், பாறைகள், மரங்கள் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் போது வருகிற அரிய சக்தி நம்முடைய உடல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது.

கிரிவல வழிபாட்டைப் பவுர்ணமி அன்று மட்டும்தான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விசேஷ தினங்கள், சிவனுக்கு உகந்த சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் சூரிய கிரகணம், அமாவாசை, புதுவருடப்பிறப்பு, ஜூன் 21 மற்றும் டிசம்பர் 21 தேதிகளில் திருவண்ணா மலையை வலம் வருதல் நலம் பயக்கும். குறிப்பாக ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் மிகவும் விசேஷமானவை.

பவுர்ணமி அன்று வலம் வருவது பொருளையும், அமாவாசை வலம் அருளையும் தரும். கிரிவலம் வருவதற்கு மிகவும் உகந்த நேரம் விடியற்காலை தான். காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான வேளைக்குப் பிரம்ம முகூர்த்தம் என்றுபெயர். இந்த வேளைக்குத் திதி, வார, நட்சத்திர, யோக, தோஷங்கள் கிடையாது. இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை நிறைவேற்றி நமது வேலைகளைச் செய்யத் தொடங்கினால் அது அதிக பலன்களைத் தரும்.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும். மலை உச்சியைப் பார் என்று ரமணர் உட்பட, பல மகான் களும் சொல்கின்ற பொழுது, மலை உச்சியில் மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப்பார், என்பதே அதன் பொருளாகும். எனவே, திருவண்ணாமலையை நோக்கிய வாறே கிரிவலம் வருகின்ற பொழுது சர்வேஸ்வரனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிர்கின்ற ஜோதி சக்தியின் அணுவுள் அணுவாய், அணுவின் பிரிவாய் ஒளிர்கின்ற அந்த ஜோதியை உள்ளூர ஆத்ம ஜோதியாகத் தரிசிக்கின்றோம் என்பது இதன் பொருளாகும். இதுவே ஸ்ரீஅகஸ்திய பெருமான் அளிக்கின்ற ஜோதி தரிசன கிரிவல முறைகளுள் ஒன்றாகும்.

ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு வழிவகுக்கின்ற உத்தம மான ஜோதி யோக முத்ரா கிரிவல முறை இது. ஆனால், இதற்கு தினம்தோறும் இல்லத்தில் விளக்கு தீப ஜோதியைத் தியானித்து தரிசிக்கின்ற வழக்கத்தைக் கைக் கொண்டால்தான் சூட்சும ஜோதியை ஓரளவேனும் உணர முடியும். நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றோமே எங்களால் திருவண்ணாமலை கிரிவலம் வர முடியாதே என்று பலர் நினைக்கக்கூடும். உங்கள் ஊர் சிவாலயத்தில் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக லிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருந்தால் தினமும் அவரது சன்னதியில் மூன்று அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி அதனைத் தியானித்து தரிசித்து வாருங்கள்.

எங்கெல்லாம் ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாரோ அங்கெல்லாம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியின் சக்தி விரவி பரவி உள்ளது என்பதை உணருங்கள். மேலும், பவுர்ணமியின் போது நாமெல்லாம் செய்கின்ற இறைப்பணி போல அதே நேரத்தில் சந்திர பகவானும் ஓர் அரிய இறைத்திருப்பணியைச் செய்து வருகின்றார். ஒவ்வொரு பவுர்ணமியிலும் தம்முடைய முழுமையான 16 கலை கிரணங்களால் திருவண்ண மலையில் ஜோதி சக்தியைப் பொழிந்து ஆராதிக்கிறார்.

அந்த சக்தியை பெற அதிகாலை கிரிவலம் சிறப்பானது. இதைத்தான் திருவண்ணாமலை அதிகாலை சூட்சமம் என்கிறார்கள்.
Tags:    

Similar News