செய்திகள்

மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிடக் கூடாது - தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

Published On 2019-05-14 11:14 GMT   |   Update On 2019-05-14 11:14 GMT
பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது.

வருவாய்த் துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால், பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை

சாதி என்ற பிரிவில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News