செய்திகள்
கு.பிச்சாண்டி

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

Published On 2021-05-08 12:25 GMT   |   Update On 2021-05-08 12:25 GMT
சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
சென்னை:

தமிழகத்தில் திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளதில் உள்ள பல்வகை கூட்டரங்கில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. முதல் நாளில் உறுப்பினர்கள் பதவியேற்பும், 2ம் நாளில் (புதன்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்களும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 
Tags:    

Similar News