செய்திகள்
டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக சோதனை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சோதனை

Published On 2021-08-20 08:19 GMT   |   Update On 2021-08-20 08:19 GMT
மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சோதனை சுகாதார துணை இயக்குனர் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க ஒருவார கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரில் டெங்கு கொசுக்களால் பாதிக்கப்படும் பகுதி என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு மற்றும் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சோதனை செய்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பணி 60 களப்பணியாளர்களுடன் தொடங்கியது. நாளொன்றுக்கு 6 வார்டுகள் வீதம் ஒரு வார காலத்திற்குள் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் கப்புகள் டயர்கள், தேங்காய் ஓடுகள், பிரிட்ஜ் எந்திரத்தின் பின்புறம் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாடிகளில் தண்ணீர் வழிந்தோடும் பகுதிகளில் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு கொசு உற்பத்தியாவது தடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் டெங்கு கொசு மருந்து அழிக்கப்பட்டதுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது நகர் நல அலுவலர் மலர்மன்னன், சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து, களப்பணி உதவியாளர் கணேசன், பூச்சியியல் வல்லுனர் சிங்காரவேலு மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News