உள்ளூர் செய்திகள்
புதிய நிர்வாகிகள் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தியகாட்சி.

நெல்லை தட்சணமாற நாடார் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Published On 2022-05-05 10:15 GMT   |   Update On 2022-05-05 10:15 GMT
நெல்லை தட்சணமாற நாடார் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:

நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், திருச்செந்தூர்- உடன்குடி ரோடு தண்டுபத்து ராம மூர்த்தி பசுங்கிளி அம்மாள் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.  

முன்னதாக விழா மேடையில் வைக்கப்பட்டி ருந்த பெருந்தலைவர் காமராஜர், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், சங்க ஸ்தாபகர் பி.எஸ்.ஆர்.ராஜா பலவேச முத்து நாடார் ஆகியோர் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆர்.சிவானந்தம் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன், ராக்கெட் ராஜா, ஆலந்தூர் கணேசன், வி.குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 4 ஆயிரம் ஆயுள்கால உறுப்பினர்கள் முன்னிலையில் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அதன் பின்னர் சங்க நிர்வாக சபை தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி என்.ராபி மற்றும் 3 உதவி தேர்தல் அதிகாரிகள், இந்த தேர்தலை நடத்தினார்கள்.

இதில் சங்க தலைவராக ஆர்.கே.காளிதாசன், செய லாளராக டி.ராஜகுமார், பொருளாளராக ஏ.செல்வ ராஜ், துணை தலைவராக அனிதா ஆர்.சிவானந்தம், துணை செயலாளராக வி.பி.ராமநாதன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 
காரியக்கமிட்டி உறுப்பினர்களாக எஸ்.கே.டி.பி. காமராஜ், எஸ்.காமராஜ், எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர், எஸ்.ஆர்.வைத்தியலிங்கம், ஏ.கல்யாண சுந்தரம், எஸ்.சிவபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து கூட்ட நடவடிக்கைகளிலும் மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து நெல்லை தட்சணமாற நாடார் சங்க புதிய நிர்வாகிகள் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News