செய்திகள்
புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் இருதய லியோ (வயது21). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.