செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 25 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா விற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.