செய்திகள்
புதுக்கோட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
புதுக்கோட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 21). இவர் சம்பவத்தன்று நண்பரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.