செய்திகள்
சஸ்பெண்டு

சுதந்திர தினவிழா நாளன்று தேசிய கொடி ஏற்றாத ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’

Published On 2021-08-18 04:09 GMT   |   Update On 2021-08-18 04:09 GMT
கடந்த 15-ந் தேதி சுதந்திர தினவிழா நாளன்று ஜாகீர்நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.
கோவை:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த அன்னபூரணி துரைசாமி உள்ளார்.

கடந்த 15-ந் தேதி சுதந்திர தினவிழா நாளன்று ஜாகீர்நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. இது குறித்து தி.மு.க. ஊராட்சி செயலாளர் ரங்கராஜ், கவுன்சிலர்கள் ராமசாமி, சுஜாதா, பழனிசாமி ஆகியோர் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரியிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி செயலாளர் காஜாமைதீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக புதிய ஊராட்சி செயலாளராக பரமேஸ்வரி நியமனம் செய்யப்பட்டார்.
Tags:    

Similar News