ஆன்மிகம்
நம்பெருமாள் ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்ற போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2020-09-11 07:42 GMT   |   Update On 2020-09-11 07:42 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று உறியடி உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் அனுமதியின்றி உறியடி உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கிருஷ்ணஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுளினார். மாலை 3 மணிமுதல் மாலை 3.30 வரை அலங்காரம் அமுது கண்டருளுளினார். பின்னர் மாலை 5.30 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

உறியடி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்வார். பின்னர் இரவு 7 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருட மண்டபத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்கிறார்.அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணியளவில் உறியடி உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். பக்தர்கள் அனுமதியின்றி உறியடி உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது.
Tags:    

Similar News