செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்திற்கு இன்று 7.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன

Published On 2021-05-09 15:48 GMT   |   Update On 2021-05-09 15:48 GMT
தடுப்பூசி பணியை அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில், இன்று தமிழகத்திற்கு மேலும் 7.5 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கு கொண்டு வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒருபக்கம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று 7.5 லட்சம் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளன. முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியிருந்தார்.



தமிழகத்தில் இதுவரை கோ-வின் இணைய தளம் தகவல்படி முதல் டோஸ் 49,05,213 பேருக்கும், 2-வது டோஸ் 16,63,028 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2,740 மையங்களில் (அரசு 2,610, தனியார் 130) தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Tags:    

Similar News