ஆன்மிகம்
பரசுராமர்

பரசுராமர் காயத்ரி மந்திரம்

Published On 2019-12-31 05:01 GMT   |   Update On 2019-12-31 05:01 GMT
ஜமதக்கினி முனிவருக்கும் - ரேணுகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை அறிந்து கொள்ளலாம்.
ஜமதக்கினி முனிவருக்கும் - ரேணுகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக கூறப்படும் இவர், பரசு என்ற கோடரியை சிவனிடமிருந்து பெற்றார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த, தன் தாயையே கொன்றவர். பின் தந்தையிடம் வரம் பெற்று தாயின் உயிரை மீட்டார்.

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இவ்விரண்டு இதிகாசங்களில் வரும் கதை மாந்தர்களில் பரசுராமரும் ஒருவராவர். கர்ணன் தன்னிடம் பொய்யுரைத்து சீடனாகச் சேர்ந்தான் என்பதற்காக, அவனுக்கு சாபம் அளித்தார்.

இவருக்கான காயத்ரி மந்திரம்..

“ஓம் சிவானுக்ரஹாய வித்மஹே
க்ஷத்ரிய நிஷீதனாய தீமஹி
தந்தோ பரசுராம பரசோதயாத்”
Tags:    

Similar News