செய்திகள்
கோப்புபடம்

உடையார்பாளையம் அருகே புகையிலை விற்ற 5 பேர் கைது

Published On 2020-11-19 13:34 GMT   |   Update On 2020-11-19 13:34 GMT
உடையார்பாளையம் அருகே புகையிலை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோழங்குறிச்சியை சேர்ந்த உலகநாதன் (வயது 45), தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த தேசியப்பன் (43) , சுத்தமல்லியை சேர்ந்த சேகர் (52), அதே பகுதியை சேர்ந்த எட்வார்ட்ஸ்ராயர் (57), உடையார்பாளையம் மூர்த்தியான் தெருவைச் சேர்ந்த சரவணன் (39) ஆகிய 5 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News