செய்திகள்
பிரதமர் மோடி

தடுப்பூசி உருவாக்கும் 3 குழுவினருடன் மோடி இன்று கலந்துரையாடுகிறார்

Published On 2020-11-30 01:12 GMT   |   Update On 2020-11-30 01:12 GMT
தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 குழுவினருடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். நேற்று முன்தினம் அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வழியாக கலந்துரையாடுகிறார்.

இதை பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News