செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா

Published On 2021-07-20 11:12 GMT   |   Update On 2021-07-20 11:12 GMT
தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 58 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 714 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News