ஆன்மிகம்
அங்காள பரமேஸ்வரி அம்மன்

நவராத்திரி விழாவையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-10-09 07:25 GMT   |   Update On 2021-10-09 07:25 GMT
திருச்செங்கோடு தாலுகா சக்திநாயக்கன்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டன.
திருச்செங்கோடு தாலுகா சக்திநாயக்கன்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. இந்தநிலையில் 3-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News