செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

Published On 2019-10-03 05:59 GMT   |   Update On 2019-10-03 10:00 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,088-க்கு விற்பனையானது.
சென்னை:

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. ஆகஸ்டு மாதத்தில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் செப்டம்பர் 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது.

அதன் பிறகு தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்தது. 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்ததால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர். எனினும் மீண்டும் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது.1 கிராம் ரூ.3,606-க்கும், ஒரு பவுன் ரூ.28,848-க்கும் விற்பனையானது.

இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,636 ஆகவும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.29,088-க்கும் விற்பனையானது.

இதே போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.49.40 ஆகவும், ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது.

அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News