செய்திகள்
தற்கொலை

பாபநாசம் அருகே தூக்குபோட்டு விவசாயி தற்கொலை

Published On 2021-04-04 10:05 GMT   |   Update On 2021-04-04 10:05 GMT
பாபநாசம் அருகே வருமானம் இல்லாமல் தவித்து வந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே ராஜகிரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42) விவசாயி. இவரது மனைவி பிரபா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்திற்கு உரிய வருமானம் இல்லாமல் ரமேஷ் தவித்து வந்தார். மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவருடைய மனைவி பிரபா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, காவலர் பழனிவேல், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News