செய்திகள்
உயிரிழப்பு

ஆரணி அருகே விஷ பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

Published On 2021-07-19 12:08 GMT   |   Update On 2021-07-19 12:08 GMT
காஞ்சிபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. அவரது மனைவி பாஞ்சாலை (வயது 60). இவர், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, விஷ பூச்சிகள் கடித்து இருக்கலாம் என கருதி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஞ்சாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News