செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எஸ்.பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் சிகிச்சைக்காக தனது மோட்டார்சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நத்தம்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் விழுந்ததில் அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம்பட்டி போலீசார் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.