உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் 2 வாலிபர்கள் தற்கொலை

Published On 2022-04-15 09:44 GMT   |   Update On 2022-04-15 09:44 GMT
நெல்லையை அடுத்த சங்கர்நகர் மற்றும் களக்காடு பகுதியில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:

களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 28). இவரது மனைவி தனலட்சுமி(21).

கடந்த 4-ந்தேதி முத்துக்குமார் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெல்லையை அடுத்த சங்கர் நகர் செல்வி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(35). இவரது மனைவி ஆனந்தம்மாள்.

சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆனந்தம்மாள் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனவேதனை அடைந்த மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனினும் அது தான் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News