உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள ஓணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு சரண்யா தனது தாய் வீடான போச்சம்பள்ளிக்கு சென்று விட்டார்.
இதனால் அங்கிருந்து அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலைக்கு சென்ற சரண்யா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து பெண்ணின் தந்தை மாதப்பன் போச்ச ம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.