செய்திகள்
கந்திகுப்பம் அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்த தொழிலாளி பலி
கந்திகுப்பம் அருகே குளியல் அறையில் வழுக்கி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள அழகியபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 21-ந் தேதி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.