செய்திகள்
அதிபர் டிரம்ப்

உங்கள் அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி - வெள்ளை மாளிகையில் டிரம்ப்

Published On 2020-10-10 19:48 GMT   |   Update On 2020-10-10 22:35 GMT
அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 1-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளைக் கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து, தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கிடையே, டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் 10-ம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பின் ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி  கையசைத்தார். அதன்பின்னர் டிரம்ப் கூறியதாவது:

நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
Tags:    

Similar News