செய்திகள்
ஆலங்குடி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை
ஆலங்குடி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தவேல் (வயது 52). இவரது மனைவி லட்சுமி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அமிர்தவேல் மனைவி அடக்கம் செய்யப்பட்ட சுடுகாட்டுக்கு அடிக்கடி சென்று கல்லறையில் படுத்து அழுவது மட்டுமின்றி அங்கேயே தூங்கி விடுவாராம். மேலும் ஊருக்குள் வரும்போது, மனைவியை பற்றி பேசிக்கொண்டு புலம்பியபடியே செல்வார். இந்த நிலையில் அமிர்தவேல் சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.