ஆன்மிகம்
திருமருகல் அருகே சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
நாகை தண்டாளம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தண்டாளம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும், முடிகொண்டான் ஆற்றில் தீர்த்தம் எடுத்தல் நடைபெற்றது.
நேற்று யாக சாலை பூஜைகள் தொடக்கம், கோபூஜை, தீபாராதனை நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும், முடிகொண்டான் ஆற்றில் தீர்த்தம் எடுத்தல் நடைபெற்றது.
நேற்று யாக சாலை பூஜைகள் தொடக்கம், கோபூஜை, தீபாராதனை நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.