ஆட்டோமொபைல்
ஸ்கோடா கார்

கார்களை குத்தகைக்கு வழங்கும் ஸ்கோடா ஆட்டோ

Published On 2020-11-11 09:07 GMT   |   Update On 2020-11-11 09:07 GMT
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது கார் மாடல்களை குத்தகைக்கு வழங்கும் புதிய திட்டத்தை துவங்கி உள்ளது.


ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஆரிக்ஸ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து கார்களை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளது. இந்த திட்டம் மாத சம்பளம் வாங்கும் நபர்கள், எஸ்எம்இ-க்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்காக அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா தெரிவித்து உள்ளது.

புகிய கிளெவர் லீஸ் திட்டத்தில் ஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ மற்றும் சூப்பர்ப் மாடல்கள் 24, 36, 48 மற்றும் 60 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மாத வாடகை ரூ. 22,580 முதல் துவங்குகிறது. 



இந்த கட்டணத்தில் சாலை வரி, பிரேக்டவுன் அசிஸ்டண்ஸ், விபத்துகளின் போது ஏற்படும் செலவீனங்கள், சர்வீஸ் பராமரிப்பு, டையர் மற்றும் பேட்டரி மாற்றம் உள்ளிட்டவை அடங்கும். 

புதிய சேவை ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, மும்பை, பூனே, பெங்களுரு, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News