லைஃப்ஸ்டைல்
அரிசி காய்கறி சூப்

சத்தான சுவையான அரிசி காய்கறி சூப்

Published On 2020-07-25 05:19 GMT   |   Update On 2020-07-25 05:19 GMT
அரிசி, காய்கறி சேர்த்து செய்யும் இந்த சூப் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த சூப் குடித்தால் நீண்ட நேரம் பசிக்காது. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 2 டேபிள் ஸ்பூன்,
(கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக் காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப் பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் - 1/4 கப் (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
வெங்காயம்  - 1,
தக்காளி  - 1,
புதினா, கொத்த மல்லித்தழை  - சிறிது,
தேங்காய்ப்பால் - 1/2 கப்,
வெண்ணெய்  3 டீஸ்பூன் + எண்ணெய்  - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள்  - 1 சிட்டிகை,
உப்பு  - தேவைக்கு.



செய்முறை

அரிசியை நன்றாக கழுவி வேக வைக்கவும்.

காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி,  கரம் மசாலாத்தூள், புதினா, கொத்த மல்லித்தழை போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.

ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான அரிசி காய்கறி சூப் ரெடி.

கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேக வைத்து சூப்பில் சேர்க்கவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News