செய்திகள்
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 51). இவர் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை குளித்தலை சுங்ககேட் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் மீண்டும் அன்று இரவு வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.