செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2021-02-23 16:59 GMT   |   Update On 2021-02-23 16:59 GMT
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், என்று ஆரணியில் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ஆரணி:

ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தி.மு.க. தலைவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகிறாரே?

அமைச்சர்: அவர்கள் கையில் சரக்கு ஏதும் இல்லை. இதனால் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டே தான் இருக்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு நமக்கு நாமே என்று கூறி கொண்டு கலர் கலராக சட்டை, பேண்டு போட்டுக்கொண்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டு, ஆட்டோவில் சென்று, டீக்கடையில் டீ சாப்பிட்டார், என்ன நடந்தது? மக்களுக்கு நன்றாகத் தெரியும். கரும்புத்தோட்டத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், அங்கு சிமெண்டு சாலை அமைக்கிறார்கள். அதை, மக்கள் நன்றாகப் புரிந்து செயல்படுவார்கள். கொரோனா தொற்று பரவல் காலத்திலும் தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, தன் உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றினர். மக்கள் தான் எஜமானர்கள். எப்போதும் ஆளுங்கட்சி மீது ஒரு எதிர்ப்பு இருக்கும். ஆனால், இப்போது அந்த எதிர்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234-க்கு 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது.

மேற்கண்டவாறு நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
Tags:    

Similar News