ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தியில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
ஸ்ரீகாளஹஸ்தி தேர் வீதியில் உள்ள புஷ்பகிரி மடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி தேர் வீதியில் உள்ள புஷ்பகிரி மடத்தில் நேற்று முன்தினம் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதையொட்டி அன்று காலை 7 மணியில் இருந்து 11.30 மணி வரை மகா அபிஷேகம், சிறப்பு பரிகார ஹோமம் ஆகியவை நடந்தது. காலை 7 மணிக்கு மங்கள வாத்தியங்கள், 8 மணிக்கு வேதப் பாராயணம், 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 9 மணிக்கு குரு கிரக பூஜை மற்றும் 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து குரு பரிகார ஹோமம், பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், தீபாராதனை, சிறப்புப்பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து குரு பரிகார ஹோமம், பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹூதி, கலசாபிஷேகம், தீபாராதனை, சிறப்புப்பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.