செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நல்லாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அம்சவல்லி(வயது 32). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அம்சவல்லி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடல் நலக்குறைவால் மன உளைச்சலுக்கு ஆளான அம்சவல்லி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.