செய்திகள்
தற்கொலை

துப்புரவு தொழிலாளி தற்கொலை

Published On 2019-11-05 09:08 GMT   |   Update On 2019-11-05 09:08 GMT
திருவொற்றியூர் அருகே துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் செந்தில்முருகன். இவர் தங்கசாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கம் உள்ளவர். எனவே இவரது மனைவி நந்தினி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த செந்தில்முருகன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துக் கொண்டே இருந்துள்ளார் 4 நாள்களுக்கு முன்பு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிய அவர் வெளியே வரவில்லை.

அக்கம் பக்கத்தினர் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எண்ணூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செந்தில் முருகன் உடல் அழுகிய நிலையில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News