உள்ளூர் செய்திகள்
.

அஞ்செட்டி வனப்பகுதியில் யானை தாக்கி தொழிலாளி படுகாயம்

Published On 2022-05-05 08:02 GMT   |   Update On 2022-05-05 08:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே யானை தாக்கியதில் தொழிலாளி காயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது65). கூலி தொழிலாளி, நேற்று காலை விறகு வெட்டுவதற்காக, குந்துக்கோட்டை வன ப்பகுதியில் சென்றார்.

அப்போது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை ராஜகோபாலை தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்து யானை சென்றுவிட்டது. அவ்வழியாக ஆடு மேய்க்க சென்ற ஜெம்பேரி (45) என்பவர் பார்த்து, அவரை மீட்டு வண்ணாத்தி கிராமத்திற்கு தூக்கி வந்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜ கோபாலை போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அவர் அனுமதி க்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News