வழிபாடு
கும்பாபிஷேகம்

300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பகோணம் உமாமகேஸ்வரர் கோவில் குடமுழுக்கு

Published On 2022-03-29 07:38 GMT   |   Update On 2022-03-29 07:38 GMT
காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு இக்கோவிலில் சாமி தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பதும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி பிள்ளையாம் பேட்டை பகுதியில் உமாதேவி உடனாகிய உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு இக்கோவிலில் சாமி தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பதும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இந்த கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. இந்த நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

இதனை தொடர்ந்து 27-ந் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. 300 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News