செய்திகள்
இறால் ( கோப்பு படம்)

பார்பிக்யூ-வில் 4 கிலோ உணவு சாப்பிட்ட சாப்பாட்டு ராமன்: தடை விதித்த ஓட்டல்

Published On 2021-11-21 09:35 GMT   |   Update On 2021-11-21 11:35 GMT
ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை.

பீஜிங்:

சீனாவில் உள்ள ஷாங்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹாங். இவர் மிக அதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமனாக வலம் வருகிறார். இவர் அதிகமாக உணவு சாப்பிடுவதை வீடியோக்கள் எடுத்து வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த நகரில் ஹன்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு சென்று அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இவர் அந்த ஓட்டலுக்கு முதல்முறை சென்றபோது 1½ கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டார்.

அடுத்த முறை ஓட்டலுக்கு சென்றபோது இதேபோல அதிக உணவுகளை சாப்பிட்டார். சமீபத்தில் அவர் அந்த ஓட்டலில் 4 கிலோ இறால் உணவுகளை சாப்பிட்டு தீர்த்தார்.

இதனால் அந்த ஓட்டலில் இனி ஹாங் நுழையக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக அந்த நிர்வாகத்தினர் கூறும்போது. அவர் எப்போது ஓட்டலுக்கு வந்தாலும் நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவின் பெரும் பகுதியை சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

எனவே மற்ற வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உணவு வழங்க முடியவில்லை. எனவே தான் அவர் ஓட்டலுக்கு வரக்கூடாது என நாங்கள் தடை விதித்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

ஆனால் ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னை ஓட்டல் நிர்வாகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது’ என்று கூறினார்.

இதையும் படியுங்கள்... வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது

Tags:    

Similar News