செய்திகள்
கைது

பவானி ஆற்று பாலத்தின் அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2019-11-21 17:55 GMT   |   Update On 2019-11-21 17:55 GMT
பவானி ஆற்று பாலத்தின் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்று பாலத்தின் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மர்மநபர் ஒருவர் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நஞ்சை புளியம்பட்டி அரிசன காலனியை சேர்ந்த சிவா என்ற மூர்த்தி (40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News